பிரேசில் தூதுவர் இலங்கை கடற்படை பிரதானியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான  பிரேசில் தூதுவர் , அதிமேதகு  எலிசபத்  சோபி மசேல்லா டி பொஸ்கோ அவர்கள் இலங்கை கடற்படை பிரதானி ரியர் அட்மிரல்  சிறிமெவன் ரணசிங்க அவர்களை இன்று(15) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார் இச்சந்திப்பின்போது கடற்படை பிரதானி மற்றும் பிரேசில் தூதுவர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த  பல்வேறுபட்ட  விடயங்கள்  தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்  கொள்ளப்பட்டன.