பசிபிக் பிராந்தியத்தய மரைன் படையின் துணைத் தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

ஐக்கிய அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய மரைன் படையின் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் பிரையன் கெவனொக் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (28) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்

இந் நிகழ்வில் அமெரிக்க பசிபிக் தளபதி அட்மிரல் ஹாரிஸ் பி ஹாரிஸ் அவர்களுடைய சார்ஜன்ட் மேஜர் அந்தோணி ச்பெடரொ,தெற்காசிய பாதுகாப்பு அலுவலகத்தின் துணை உதவி செயலாளரச் திருமதி பிரிட்டானி பிலிங்கிச்லி, இலங்கைக்கான அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு ஜேக்கப் இங்லிஷ்,மற்றும் அமெரிக்க கடற்படை ஆலோசகர் லெஃப்டினென்ட் கமாண்டர் பிரையன் பேஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த இச்சந்திப்பின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிளும் பகிர்ந்து கொண்டதுடன் புதிதாக நிறுவப்பட்ட இலங்கை கடற்படையின் மரைன் படையின் எதிர்கால நடவடிக்கைகள், செயல்பாடுகள் மற்றும் பயிற்சிகள் பற்றியும் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அத்துடன் வருகை தந்த அமெரிக்க பிரதிநிதிகளும் கடற்படைத் தளபதி அவர்களை சந்தித்து இரு நாட்டு கடற்படையின் விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பை பலப்படுத்துதல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.