நான்கு கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

புலனாய்வு பிரிவினர் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி நீர் கொழும்பு பொலிஸ் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது நீர்கொழும்பு பகுதியில் வைத்து நான்கு கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர் மற்றும் கேரலா கஞ்ச ஆகியன மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.