ஜப்பான் கடலோர பாதுகாப்புபடை அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

சர்வதேச கடல் மாசு தடுப்பு பணிப்பாளர் திரு.ரய்ஜி ஹய்யாஷி தலைமையில் வருகை தந்துள்ள ஜப்பான் கடலோர பாதுகாப்புபடை பிரதிநிதிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (02) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.அத்துடன் வருகை தந்துள்ள குறித்த பாதுகாப்புடை அதிகாரிகள் இலங்கையில் நடைபெறவுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த இச்சந்திப்பின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.மேலும் இந்நிகழ்வில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிகழச்சித்திட்ட அதிகாரி திரு.இந்திக்க கப்ரால் அவர்களும் கலந்து கொண்டார். குறித்த இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.