சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

புல்மொட்டை வடகிழக்கு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த 08 இந்திய மீனவர்களை கிழக்குக் கடற்படை கட்டளைக்கு சொந்தமான அதிவேக படகுகடற்படை வீரர்களினால் நேற்று (03) கைது செய்யப்பட்டனர். அத்துடன் ஒரு இழுவைப் படகும் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் படகு ஆகியன திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.