சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் 24 பேர் (04) நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

நெடுந்தீவின் தென் பகுதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் மற்றும் அவர்களுடைய இரண்டு படகுகள் ஆகியன இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரன்டு அதிவேக படகின் கடற்படை வீரர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் படகுகள் ஆகியன கன்கேசந்துரையின் உத்தர நிருவனத்திக்கு கொண்டு வந்த பின்னர், யாழ்ப்பாண கடற்றொழில் பணிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவின் இரன்டு அதிவேக படகின் கடற்படை வீரர்கள் மன்னாருக்கு வடக்கு பகுதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் 15 பேர் மற்றும் அவர்களுடைய இரண்டு படகுகள் ஆகியன கைது செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் படகுகள் ஆகியன மன்னார் கடற்றொழில் பணிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.