ஐக்கிய அமெரிக்க கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துற்கு வருகை
 

ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைக்குச் சொந்தமான “போல் ரிவர்” எனும் அமெரிக்க கடற்படை கப்பல் இன்று (மார்ச் .07) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டது

குறித்த இக்கப்பலில் வருகைதந்த அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மற்றும் ஜப்பான் நாட்டு கடற்படை வீரர்கள் ஹம்பாந்தோட்டைதுறைமுபகத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும், குறித்த இக்கப்பலில் வருகைதந்த கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படை வீரர்களுடன் இணைந்து திட்டமிடப்பட்ட மருத்துவ சிகிச்சை, பாடசாலைகளை புணரமைத்தல் மற்றும் வைத்திய சாலைகள் புனரமைப்பு செய்தல், தொழில் நிபுணர்களின் நிபுணத்துவ பரிமாற்றம், சமூக உறவுத் திட்டங்கள், பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தலில் பெண்களின் வகிபாகம் போன்ற பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண செயற்திட்டம் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். குறித்த இச்செயற்திட்ட முயற்சியானது அரசினுடைய இயங்குதிறனை இலங்கை கடற்படை ஏனைய நாட்டு கடற்படையுடன் இணைந்து நெருக்கடி சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கும் வகையில் விளக்கங்களுடனான நிகழ்வுகளும் இடம்பெற உள்ளது.

இதேவேளை, குறித்த இக்கப்பல் இம்மாதம் 18ம் திகதி புறப்படவுள்ளது.