கேப்டன் அணில் போவத்த அவர்களினால் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் சங்கத்திற்கு நிலம் அன்பளிப்பு
 

இலங்கை கடற்படையில் சேவையாற்றும் கேப்டன் அணில் போவத்த அவர்களால் ஓய்வு பெற்ற முப்பபடை வீரர்கள் சங்கம் பயன்படுத்தும் வகையில் கண்டி கட்டுகஸ்தோட்டவில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்துடன் 30 பேர்ச்சஸ் நிலப்பரப்பினைக் கொண்ட நிலத்தினை அன்பளிப்பு செய்தார். குறித்த இந்நிகழ்வு மஹா சங்கத்தினரின் மத ஆசிர்வாதத்துடன் அண்மையில் ( பெப்ரவரி.25) நடைபெற்றது.

ஓய்வு பெற்ற முப்பபடை வீரர்கள் சங்கத்தின் தலைவர் அவர்கள் குறித்த சங்கம் சார்பாக குறித்த அன்பளிப்பினை ஏற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் முப்படையின் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.