ஹெரோயுனுடன் ஒருவர் கைது
 

புலனாய்வு பிரிவனர் வழங்கிய தகவலின் மூலம் நேற்று (7)மேற்குக் கடற்படை கட்டளைக்கு சொந்தமான கொழும்பு, இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம கடற்படையினர் மற்றும் போலீஸ் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது 30 கிராம் ஹெரோயுனுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இந் நபர் ஜா-எல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யபட்ட நபர் மற்றும் ஹெரோயின் ஆகியன மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கொழும்பு போலீஸ் போதை மருந்துதடுப்பு பிரிவினரிடம்ஒப்படைக்கபட்டன.