நைஜீரிய கடற்படை அதிகாரிகள் மூவர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

நைஜீரிய கடற்படை கடமையில் ஈடுபடும் ரியர் அட்மிரல் டி டிக், கொமடோர் இயோ பெர்ரேரோ மற்றும் கொமான்டர் ஏஜே பெல்லொ ஆகிய சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (02) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர். குறித்த இச்சந்திப்பின்போது இருதரப்பு முக்கியத்துவம்வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.