இந்திய கடலோரக் காவல்படையின்“சூர்” கப்பல் கொழும்புவருகை
 

இந்திய கடலோரக் காவல்படையின்“சூர்” கப்பல் பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (04) கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர்கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளது

இக்கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் எஸ்.எஸ்டசீலா அவர்கள் மேற்கு கடற்படை கட்டளைதலைமையகத்தில் மேற்கு கடற்படை பிரிவின் தளபதி ரியர் எட்மிரல் நிராஜ அட்டிகளஅவர்களை சந்தித்து பேசினார். அங்கு அவர்கள் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு குறித்து நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இக் கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது இலங்கை கடற்படையினர் ஏற்பாடுசெய்யும் சிலகடற்படைப் பயிற்சிகளுக்கும் பங்கேற்க உள்ளனர்.அதன் படி கடற்படை பயிற்சிதிட்டங்கள் மற்றும் கடற்படை விளையாட்டு அணிகளுடன் விலயாட்டு ஆட்டங்களின் பங்கேற்பார்கள். குறித்த இக்கப்பல் இம்மாதம் 08ம் திகதிபுறப்படவுள்ளது.