சட்டவிரோத மீன்பிடிப்பதில் ஈடுபட்ட 38 இந்திய மீனவர்களுக்கு விடுதலை
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 38 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (04) இலங்கை கடற்படையின் உதவியின் நடைபெற்றுள்ளது. அப் பணி காங்கேசன்துறையின் வடக்கு சர்வதேச கடற்பரப்பில் நடத்தப்பட்டது. அதற்காக இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்கிரம மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் சிஜி 43 கப்பலும் இந்திய கடலோர காவல்படையின் 'அயுஷ்' கப்பலும் கலந்து கொண்டது.

இந்த மீனவர்கள் கடந்த  மார்ச் 20ம் திகதி இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதே போன்ற இலங்கையின் கைது செய்யப்பட்டு விடுதலை வழங்கிய 136 மீனவர்களுடன் இந்த ஆண்டுக்குள் அனைத்து 174 மீனவர்களுக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளன.