06 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், மக்களுக்கு சுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த பகுதிகளில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்பட்டு வருகின்றன.

அதன் மற்றுமொரு திட்டமாக.மெதிரிகிரிய,திவுலன்கடவல,வடிகேவெவ தர்ம ஜயந்தி விஹாரய,திம்புலாகல புதிய மிலான புல்லியகொட ரஜமகா விஹாரய,கெகிராவ மடாகமுவ மற்றும் திரப்பனே வெல்லமுதாவ அகிய கிராமங்ளில் நிர்மாணிக்கப்பட்ட 06 நீர் சுத்திகரிப் இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப் பட்டுள்ளது.

குறித்த இச் செயற்றிட்டத்தின் மூலம் திவுலன்கடவல கிராமத்தில் வசிக்கின்ற 620 குடும்பங்களும் வடிகேவெவ கிராமத்தில் வசிக்கின்ற 495 குடும்பங்களும்,தர்ம ஜயந்தி விஹாரய சேதியகிரிய விஹாரயின் அப் பகுதியில் 590 குடும்பங்களுக்கும்,புதிய மிலான புல்லியகொட ஒடாடுகம கிராமத்தில் 510 குடும்பங்களுக்கும் மற்றும்வெல்லமுதாவ கிராமத்தில் 1500 குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

மேலும் திவுலன்கடவல,வடிகேவெவ,தர்ம ஜயந்தி விஹாரய,மடாடுகம மற்றும் வெல்லமுதாவ ஆகிய இடங்களழன் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகருப்பு இயந்திரங்களுக்காக சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிதி அனுசரணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதெ போன்ற புதிய மிலான புல்லியகொட ரஜமஹா விஹாரயத்தில் நிர்மாணிக்கப்பட்ட நீர்சுத்திகரிப் இயந்திரங்களுக்காக பெளத்த சாசன அமைச்சின் நிதி அனுசரணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது வரை 185 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில்நிருவப்பட்டுள்ளன 86,586 குடும்பங்களுக்கு மற்றும் 64,581ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும்இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.