05 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், மக்களுக்கு சுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த பகுதிகளில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்பட்டு வருகின்றன.

அதன் மற்றுமொரு திட்டமாக. கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தம்புல்ல,தமனயாய,அனுராதபுர பகுதியில் குடாகம மற்றும் ஹல்மில்லாவ மாயிங்கமுவ,புத்தலம பகுதியில் தபிபொவ மெதிரிகிரிய பகுதியில் திஸ்ஸபுர ஆகிய கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட 05 நீர் சுத்திகரிப் இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இச் செயற்றிட்டத்தின் மூலம் தமனயாய கிராமத்தில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் வசிக்கின்ற 1200 குடும்பங்களும் குடாகம கிராமத்தில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் வசிக்கின்ற 620 குடும்பங்களும்,மாயிங்கமுவ கிராமத்தில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம்  அப் பகுதியில் வசிக்கின்ற 550 குடும்பங்களும் தபிபோவ கிராமத்தில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம்  அப் பகுதியில் வசிக்கின்ற 520 குடும்பங்களும் திஸ்ஸபுர கிராமத்தில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் வசிக்கின்ற 570 குடும்பங்களும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

 மேலும் திஸ்ஸபுர கிராமத்தில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகருப்பு இயந்திரங்களுக்காக சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிதி அனுசரணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதெ போன்ற தம்புள்ள தமனயாய,ரபேவ குடாகம, ஹல்மில்லாவ மாயிங்கமுவ புத்தலம் தபிபோவ அகிய கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட நீர்சுத்திகரிப் இயந்திரங்களுக்காக சிரச கம்மெத்த 100 தினத் திட்டம் மூலம் நிதி அனுசரணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த நீர் சுத்திகருப்பு இயந்திரங்கள் சூரிய சக்தியால் நிறைவேற்றுவதற்காக கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு நடவடிக்கைகள் எடுத்துகொன்டுருக்கின்ரன. தப்போலது தனமல்வில ஹம்பேகமுவ பகுதியில் 05 நிர் சுத்திகருப்பு இயந்தரங்கள் சூரிய சக்தியால் வெற்றிகரமாக இணைந்து கொண்டுவரப்படுகின்றன.

இது வரை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் 190 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டுள்ளன 90,046 குடும்பங்களுக்கு மற்றும் 70,200ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும்இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.