சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகில் இணைக்கப்பட்ட கடற்படையினரால் இன்று (01) மன்னார் வடக்கு பகுதி கடலில் வைத்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு படகு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.