சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (02) மன்னார் சவுத்பார் பகுதி கடலில் சட்டவிரோதமான வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய 02 ரோந்துப் படகு, தடை செய்யப்பட்ட 04 வலைகள், 06 சுழியோடிமுகமூடிகள் 05 சோடி சுழியோடி காலணிகள் மற்றும் பிடிக்கப்பட்ட 2210 கிலோகிராம் மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.