இலங்கை கடற்படைக்காக இந்தியாவில் உற்பத்தி செய்த இரண்டாவது உயர் தொழில்நுட்ப கப்பல் ஆரம்பித்து வைப்பு
 

இலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்படுகின்ற உயர் தொழில்நுட்ப கப்பல் கடந்த இரன்டாம் திகதி (02) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கப்பல் ஆரம்ப வைபவநிகழ்வு பாதுகாப்பு தயாரிப்புகளுக்கான செயலாளர் ஸ்ரீ ஏ கே குப்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. அவரின் மனைவியான திரு ப்ரீதி குப்தா மூலம் இன் கப்பல் சம்பிரதாயப்படி ஏவப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் 2350 தொன் நிறைகளை எடுத்துச்செல்லும் வகையில் 105.7 மீட்டார் நீளம் மற்றும் 13.6 மீட்டார் அகலம் கொண்டதாகவும் நிர்மாணிக்கப்படுள்ளது. மேலும் 18 அதிகாரிகள் மற்றும் 100 மாலுமிகளுக்கான தங்குமிட வசதிகளையும் கொண்டிருப்பதுடன் 4,500 கடல் மைல்கள் தொலைவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் மற்றும் உலங்குவானூர்திகளை எடுத்துச்செல்லும் வகையிலான தளத்தினை கொண்டுள்ளதாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை கடற்படையின் வடபிராந்திய கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா அவர்களின் தலைமையிலான இலங்கை கடற்படை பிரதிநிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

கடந்த ஆன்டு டிசம்பர் 15ம் திகதி குறித்த உயர் தொழில்நுட்ப கப்பலை ஏவப் பாதை மூலமாக கடலுக்கு வெளியீடுவது இந்தியாவில் இலங்கை உயர் ஆணையாளர் அதிமேதகு திருமதி சித்ராங்கனி வாகீஷ்வர தலைமயில் நடைபெற்றது.