இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் நன்திமித்ர சாங்கி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.
 

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சிக்கு பங்கேற்க சிங்கப்பூருக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் நன்திமித்ர நேற்று(12) சிங்கப்பூரில் சாங்கி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.

இப் கப்பல்கலிள் கட்டளை அதிகாரிகள் கெப்டன் அனுர தனபால மற்றும் நிஷாந்த பீரிஸ் ஆகியவர்கள் சிங்கப்பூரில் இலங்கையின் உயர் ஆணையாளர் அதிமேதகு நிமல் வீர்ரத்ன அவர்களை சந்தித்தார் இச்சந்திப்பின் போது பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

குறித்த கப்பல்கள் வரும் 18ம் திகதி வரை சிங்கப்பூரில் தங்கிருக்கும் காலத்தில் போர் கப்பல்கள் கண்காட்சி, சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி, சர்வதேச கடல்சார் பொறியியல் மாநாடு மற்றும் கடற்படை நெட்வொர்க் திட்டம் ஆகிய திட்டங்களின் பங்குப்பெறும்.