அவுஸ்திரேலிய “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பலில் வரவேற்பு விழா
 

இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு கப்பலான “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பலில் நேற்று(16) மித வெப்பமான வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. குறித்த வரவேற்பு விழாவின் தலைமை அதிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கழந்துகொன்டார்.

குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உட்பட இலங்கைத் தூதுக்குழு மிக அன்புடன் வரவேற்கப்பட்டுள்ள பின் இவர்கள் கப்பலின் ஊழியர்களுடன் சினேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த நிகழ்வின் பல சிறப்பு விரிவுரைகளும் நடைபெற்றன. மேலும் கடற்படை கலாச்சாரம் குழு மற்றும் கீழைநாட்டு இசைக்குழு மூலம் இலங்கையின் கலாச்சாரம் பிரதிபலிக்கும் வகையில் அருமையான நடனங்கள் மற்றும் பாடல்கள் வழங்கபட்டுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுனர் கெளரவ ஒஸ்ரின் பெர்னான்டோ, இலங்கையின் அவுஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதிமெதகு ப்ரைஸ் பவசன், கிழக்குக் கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னைய்யா, இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க ஆகியவர்கள் மற்றும் கிழக்குக் கடற்படை கட்டளை துனை அதிகாரி கொமடோர் ருவண் பெரேரா உட்பட பெருமை வாய்ந்த பல விருந்தினர்கள் குறித்த வரவேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.