சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்குக் கடற்படை கட்டளையின் கடற்படைவீர்ர்களால் நேற்று (16) திருகோணமலை நார்வே தீவு பகுதி கடலில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு மற்றும் தடை செய்யப்பட்ட ஒரு வலை(300m) கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் நீரியல்வள நிலையத்தின் உதவி இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.