02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (20) வவுனியா, இலங்கை போக்குவரத்துச் சபையில் மற்றும் பிரதேச செயலக அலுவலகத்தில் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்காக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் இப் பிரதேசத்தைச் சேர்ந்த, 365 குடும்பங்களும் பிரதேச செயலக அலுவலகத்தில் நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் இப் பிரதேசத்தைச் சேர்ந்த, 425 குடும்பங்களும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொண்டுள்ளனர்

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் திறன் மற்றும் அறிவு பயன்படுத்தி இது வரை 202 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டுள்ளன 100,790 குடும்பங்களுக்கு மற்றும் 75,000ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.