வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருகை
 

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிவாரண உதவிநடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” இன்று (மே, 28) கொழும்பு துறைமுகம் வந்துள்ளது. குறித்த கப்பல் கட்டளைத்தளபதி ரோஹித் மிஸ்ரா அவர்களால்கட்டளையிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த கப்பலுடன் 4 சிறியரக படகுகள் மற்றும் 27 கடற்படை அதிகாரிகள் உட்பட 100 கடற்படை வீரர்கள், 3 வைத்தியர்கள், 6 மருத்துவ உதவியாளர்கள், 12 சுழியோடிகள் வீரர்கள் மற்றும் பல்வேறுமீட்புகுழுக்களும் வருகைதந்துள்ளதுடன், உலருணவு, குடிநீர் போத்தல்கள், தற்காலிக கூடாரம் மற்றும் மருந்து வகைகள் என்பன கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (மே, 27) வருகைதந்த இந்திய கடற்படை கப்பல் “கிர்ச்” தற்பொழுது களுத்துறை மாவட்ட உடுகம மற்றும் கலபத ஆகிய இடங்களில்இலங்கை கடற்படையினருடன் இணைந்து வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மூன்றாவது இந்திய கடற்படை கப்பல் “ஜலஷ்வ” நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள நாளை இலங்கை வர இருப்பதாகவும்தெரிவிக்கப்படுகிறது.