சூரியவெவ மீககஜதுற குளத்தின் புனர்நிர்மாணப்பணிகளுக்கு கடற்படையின் ஆதரவு
 

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த சூரியவெவமீககஜதுற குளத்தின் புனர்நிர்மாணப்பணிகள் அண்மையில் (ஜுன், 02) நிறைவுசெய்யப்பட்டது.குறித்த இக்குளம் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்புரைக்கமைய கடற்படையினரின் சமூக நலத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட காலமாக பாழடைந்த மற்றும் குப்பை நிறைந்துருந்த குறித்த குளத்தின் புனர்நிர்மாணப்பணிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு மூலம் ஏட்பாடுசெய்யப்பட்ட குறித்த திட்டம் கொமான்டர் அன்டனி வீரசிங்க அவரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.