சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (05) வங்காலை நாரபாடு கடல் பகுதியில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 உள்நாட்டு மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய 02 டாலர் படகுகள் மற்றும் 500 மீட்டர் நீளமான சட்டவிரோதமான ஒரு வலை கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் துனை கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது