கடலில் மிதந்த 5.5 கிலோ கிராம் ஹெரோயின் கைது
 

காங்கேசன்துறை துறைமுகதிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் சுமார் 5.5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (ஜூன் 09) ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான கரையோர பாதுகாப்பு பிரிவினரின் சீஜி 41 படகில் சென்ற கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்து வந்த பொதி ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதனை சோதனையிட்டபோது 05 பாக்கெட்டுகள் ஹெரோயின் போதைப்பொருள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

(இதுக்கு முன்னதாக கடந்த மே மாதம் 12 ம் திகதி குறித்த கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 9.3 கிலோ கிராம் ஹெராயின் கடற்படையினறால் கன்டுபிடிக்கப்பட்டுள்ளது)