பாக்கிஸ்தான் கடற்படை தளபதி இலங்கைக்கு வருகை
 

கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிலையத்தின் இடம்பெறவுள்ள அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் நேற்று (ஜூன்,10) இலங்கைக்கு வருகைதந்தார்.அவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களால் வறவேற்கப்பட்டுள்ளது

குறித்த நிகழ்வுக்காக பாகிஸ்தான் கடற்படை தளபதியின் தலைமை செயலாளர் கொமடோர் ஜாவேத் இக்பால் பாக்கிஸ்தான் கடற்படை கல்வியகத்தில் தளபதி கொமடோர் அட்னான் அகமது இலங்கையின் பாக்கிஸ்தான் உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இர்ஷான் கான் ஆகியவர்கள் கழந்துகொன்டனர்.

கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் 30வது,31வது மற்றும் 55வது ஆட்சேர்ப்புகளில் மத்திய அதிகாரிகள் மற்றும் சேவை அணுகல் அதிகாரிகளின் வெளியேறும் நிகழ்வு இன்று (ஜூன் 11) கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிலையத்தின் நடைபெறவுள்ளன.

1975ம் ஆண்டு பாகிஸ்தான் கடற்படையில் இணைந்துகொண்ட இவர் 1978ம் ஆண்டு ஆணை அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியாக செயல்பாட்டு பிரிவில் நியமிக்கப்பட்டார். அத்துடன், 2014 ஆம் ஆண்டு அவர் பாகிஸ்தான் கடற்படை தலைமை அலுவலகத்தில் கடற்படை தளபதியாக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.