பாகிஸ்தானிய கடற்படை தளபதி இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் இன்று (ஜூன், 12) இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களளை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.அங்கு அவரை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டன.

பாகிஸ்தான் கடற்படை தளபதியுடன் அவரது செயலாளர் கொமடோர் ஜாவேத் இக்பால் மற்றும் இலங்கையின் பாக்கிஸ்தான் உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இர்ஷான் கான் ஆகியவர்கள் இன் நிகழ்வில் கழந்துகொன்டனர்.

இச்சந்திப்பின் போது இலங்கை கடற்படை தளபதி மற்றும் பாகிஸ்தானிய கடற்படை தளபதி ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம்வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.