பாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் மற்றும் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
 

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியவர்களளை இன்று (ஜூன், 13) பாதுகாப்பு அமைச்சில் சந்திதித்துள்ளார்.

இவர்கள் இடையில் இரு தரப்பு முக்கியத்துவம்வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் கடற்படை தளபதியின் செயலாளர் கொமடோர் ஜாவேத் இக்பால் மற்றும் இலங்கையின் பாக்கிஸ்தான் உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இர்ஷான் கான் ஆகியவர்களும் இன் நிகழ்வில் கழந்துகொன்டனர்.

மேலும் பாகிஸ்தானிய கடற்படை தளபதியவர்கள் பாதுகாப்பு படைகளின் பிரதாணி எயார் சீப் மாஷல் கோலித குணதிலக , இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த த சில்வா, விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியவர்களையும் நேற்று (ஜூன், 12) சந்திதித்துள்ளார்.