இலங்கை விஜயத்தின் பின் பாக்கிஸ்தான் கடற்படை தளபதி தாய்நாடு திரும்பினார்
 

இலங்கையின் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் வெற்றிகரமாக விஜயத்தின் பின் இன்று (ஜூன் 14) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாக்கிஸ்தானுக்கு சென்றார். இவர் கடந்த 11ம் திகதி மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இலங்கை விஜயத்தின் போது இலங்கை கடற்படை மூலம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள பல நிகழ்வுகளில் கலந்துகொன்ட இவர் கடந்த 11ம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிலையத்தின் நடைபெற்ற வெளியேறும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் இலங்கை அரசாங்கத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு தலைவர்கள் சந்திக்க குறித்த விஜயம் வாய்ப்பானது.இது இருநாடுகள் இடையில் நட்புறவை வளர்ப்பதற்காக மற்றும் வலுப்படுத்த உதவும். இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களின் அழைப்பின்பேரில் பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கையில் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.