நிவாரண உதவிகளின் பிறகு அமெரிக்க கடற்படையின் “லேக் எரை” கப்பல்தாயகம்திரும்பின
 

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் கடந்த 11 ம் திகதி இலங்கைக்கு வருகை தந்தஅமெரிக்க கடற்படைக்குச்சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் இன்று (ஜுன் 19) வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து கொழும்பு துறைமுகத்தை விட்டுதாயகம் திரும்பின

கேப்டன் டீ மெக்பர்சன் அவர்கள் கட்டளை அதிகாரியான இக் கப்பலில் 300 பணியாளர்கள் கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியுள்ளனர்,

மேலும், இக்கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள நாட்களில் இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறுநிகழ்வுகளில் பங்கேற்றனர்