பிரான்ஸ் கடற்படை யின் இரு கப்பல்கள் கொழும்பு வருகை
 

பிரான்ஸ் கடற்படையின் “மிஸ்டல்” மற்றும் “கோபட்” கப்பல்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த இக்கப்பள்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்.

மிஸ்டல் கப்பலில் 56 அதிகாரிகள் உட்பட 431 கடற்படைவீர்ர்களும் கோபட் கப்பலில் 18 அதிகாரிகள் உட்பட 157 கடற்படைவீர்ர்களும் இருகின்றனர்.

மேலும், இம்மாதம் 26ம் திகதி வரை இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இக்கப்பல்களின் சிப்பந்திகள் இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கத்தில் வெலிசர கடற்படை முகாமில் கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.