பிரான்ஸ் கடற்படை கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள பிரான்ஸ் கடற்படையின் “மிஸ்டல்” மற்றும் “கோபட்” கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கேப்டன் ஸ்டனிலஸ் டீ சாகர்ஸ் மற்றும் கொமான்டர் க்செவியர் பாகொட் ஆகியவர்கள் மேற்கு கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அடமிரல் நிராஜ் அடிகல அவர்களை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

‍இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.