சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 மினவர்கள் எலிசபத் தீவு கடல் பகுதிகளில் வைத்து நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளன

மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு, 225 மீட்டர் நீளமான சட்டவிரோத ஒரு வலை மற்றும் பிடிக்கபட்டுள்ள 80 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் ஆராய்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.