மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (01) குருநாகல் பகுதியில் ரிதீகம,ரன்தெடிஉயன கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிருவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் 350 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதி பெருகின்றன.குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரத்துக்காக இலங்கை மாவட்ட கிராண்ட் லாட்ஜ் அமைப்பு மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது

கடற்படைத் தளபதியின் எண்ணக்கருவின் படி கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி மக்களுக்கு சுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் சிறுநீரக நோய் ஆபத்தான பகுதிகளில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுகின்றன.இது வரை 224 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 107,390 குடும்பங்களுக்கு மற்றும் 76,520 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.

மேலும் கடற்படை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற குறித்த திட்டம் இலங்கையில் மற்றும் வெளிநாடுகளில் பாராட்டப்படுகிறது. இதுக்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் நிதி உதவி வழங்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வுக்காக மதிப்பிற்குரிய துறவிகள், சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை மாவட்ட கிராண்ட் லாட்ஜ் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அப் பகுதி மக்களும் பங்கேற்றனர்.மேலும் குறித்த திட்டத்தை பாராட்டிய இலங்கை மாவட்ட கிராண்ட் லாட்ஜ் அமைப்பின் பிரதிநிதிகள் எதிர் காலத்திலும் இலங்கை கடற்படையுடன் இணைந்து குறித்த திட்டத்துக்கு அவர்களின் ஆதரவு வழங்குவோம் என்று கூறினார்கள்