மேலும் ஒருநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்ன அவர்களின்வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொதுமக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.இத் திட்டங்களின் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக சிறுநீரக நோய் ஆபத்தான பகுதிகளில் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கும் நோக்கத்தின் தனமல்வில கிலிபுன்ன கிராமத்தில் நிருவப்பட்டுள்ள ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இன்று (07) ஜனாதிபதி திட்ட இயக்குநர் (ஊவா), ஜகத் புஷ்பகுமாரஅவர்களால் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியால் நிதி பங்களிப்பு வழங்கிய குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் 120 குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதிபெருகின்றன.

கடற்படைத் தளபதியின் எண்ணக்கருவின் படி கடற்படை ஆராய்ச்சி மற்றும்அபிவிருத்தி பிரிவின் அறிவுமற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி மக்களுக்குசுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் சிறுநீரக நோய் ஆபத்தான பகுதிகளில் நீர்சுத்திகரிப்புநிலையங்கள் நிருவப்படுகின்றன.இது வரை 226நீர்சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு107,510குடும்பங்களுக்கு மற்றும் 80,185ற்கு மேற்பட்ட மாணவர்களுக்குசுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும்.

எதிர்காலத்திலும் இத்தகையபல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளன.