சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 மீனவர்கள் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (14) சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 மினவர்கள் இரன்டு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

அதின் பிரகாசமாக சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 மினவர்கள் நிலாவெலி புறா தீவுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன. மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய இரு படகுகள், 220 மீட்டர் நீலமான சட்டவிரோத இரு வலைகள், இரு நிர் முழ்கி முகமூடிகள், இரு ஜோடி நிர் முழ்கி காலனிகள் மற்றும் பிடிக்கப்பட்டுள்ள 319 கிலோகிராம் மீன் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள், படகுகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகதுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 மீனவர்கள் திருகோணமலை லங்கா பட்டுன கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன. அங்கு ஒரு படகு, ஒரு ஜோடி நிர் முழ்கி காலனி, ஒரு நிர் முழ்கி முகமூடி மற்றும் சட்டவிரோதமான வலை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள், படகு மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் மீன் கண்காணிப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.