ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் போர்கப்பல்கள் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் (JMSDF) இசுமோ மற்றும் சசனமி கப்பல்கள் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (ஜுலை 23) கொழும்பு துறைமுகத்தை விட்டு தாயகம் திரும்பின. இங்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி குறித்த கப்பல்கள் அனுப்பிவைத்தனர்.

இக்கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் மற்றும் பல போட்டிகளில் பங்கேற்றனர். மேலும் இவர்கள் இலங்கை கடற்படை கப்பல் சயுரவுடன் இனைந்து மனிதாபிமான நிவாரண மற்றும் பேரழிவு பதிலிறிப்பு பற்றிய கூட்டு பயிற்சியொன்றும் மேற்கொன்டுள்ளனர்.