‘சயுருசர’ எனும் 33 வது சஞ்சிகை வெளியீடு, சயுருசர சஞ்சிகைக்கு 10 ஆண்டு நிறைவு
 

கடற்படையினரின் ஆக்கங்களைக் கொண்ட ‘சயுருசர’ எனும் 33வது சஞ்சிகையின் பிரதி ஒன்று இன்று (24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு பிரதம ஆசிரியர் லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பிரேமவீர அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. குறித்த சஞ்சிகையுடன் சயுருசர சஞ்சிகைக்கு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந் நிகழ்வின்போது கடற்படை உதவியாளர்,கடற்படை ஆராய்ச்சி பிரிவின் சிரேஷ்ட உத்தியோகத்தர் மற்றும் ‘சயுருசர’ கட்டுரையில் ஆலோசகர் கேப்டன் ரோஹன் ஜோசப் ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் கடற்படையினரின் அறிவு, திறமை மற்றும் அணுகுமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் கடற்படை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறுபட்ட சமூகத் திட்டங்கள் உட்பட குறிப்பிட்ட சந்தர்ப்பங்கள் பற்றி கடற்படையினர் தெரிந்து கொள்ளும் வகையில் கடற்படை தளபதியின் ஆலோசனையில் குறித்த இச் சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.