ஐக்கிய இராச்சிய பிரதி உயர்ஸ்தானிகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ஐக்கிய இராச்சிய மற்றும் வட அயர்லாந்து உயர் ஆணையத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் டொம் பர்ன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (ஜூலை 28) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இச்சந்திப்பில், இலங்கையின், ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ச்டுவட் போர்லண்ட் அவர்களும் கலந்துகொண்டார்.