03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட மேலும் 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கலநேவ கதுலுகமுவ பாடசாலை, நேகம முஸ்லிம் கல்லுரி மற்றும் முல்லைதிவு துனுக்காய் ஆகிய இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 2) மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத் திட்டங்களின் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக சிறுநீரக நோய் ஆபத்தான பகுதிகளில் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்குவது அறிமுகப்படுத்த முடியும்.

கல்னேவ, கதுலுகமுவ கல்லுரியின் நிருவப்படுள்ள சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பாடசாலையின் 431 மாணவர்களுக்கும் அப் பகுதியில் 378 குடும்பங்களுக்கும் கல்னெவ நேகம முஸ்லிம் கல்லுரியின் நிருவப்படுள்ள சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பாடசாலையின் 700 மாணவர்களுக்கும் அப் பகுதியில் 456 குடும்பங்களுக்கும், முல்லைதிவு துனுக்காய் பகுதியில் நிருவப்படுள்ள சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் 325 குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும்

கதுலுகமுவ பாடசாலையில் மற்றும் நேகம முஸ்லிம் பாடசாலையில் நிருவப்படுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்காக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. முல்லைதிவு துனுக்காய் பகுதியில் நிருவப்படுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்காக பாக்கிஸ்தான் குடியரசு மற்றும் சிரச கம்மெத்த திட்டம் மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி மக்களுக்கு சுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுகின்றன.இது வரை 242 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 115,925 குடும்பங்களுக்கு மற்றும் 81,316 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வுகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் இஷான் அவர்கள், இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஆணையாளர் நிருவனத்தில் நடிப்பு ஆணையாளர் சப்ராஸ் அகமது கான் சிப்ரா அவர்கள், அநுராதபுர மாவட்ட சிறுநீரக அழுகல் நோய் தடுப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி திஸ்ஸ கரலியத்த அவர்கள் மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், அப் பகுதி மக்கள் உட்பட பல பாடசாலை மானவர்கள் கழந்துகொன்டனர்.