03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத் திட்டங்களின் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி மக்களின் சுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கது. அதின் பிரகாசமாக ரிதிமாலியத்த, பின்னகொல்ல, ரிடிகஹஅராவ, மற்றும் மஹியங்கனை செனெவிகம ஸ்ரீ தர்மாச்ரம புத்த மையம் ஆகிய இடங்களில் மேலும் 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (ஆகஸ்ட் 07) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பின்னகொல்ல கிராமத்தில் நிருவப்படுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் 350  குடும்பங்களும், ரிடிகஹஅராவ பகுதியில் நிருவப்படுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் 465 குடும்பங்களும், ஸ்ரீ தர்மாச்ரம புத்த மையமத்தில் நிருவப்படுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் புத்த மையமத்தில் கல்வி கற்கும்  54 குழந்தைகள் மற்றும்  அப் பகுதியில் 485 குடும்பங்களும் சுத்தமான குடிநீர் வசதி பெறுகின்றனர்.

பின்னகொல்ல மற்றும் ரிடிகஹஅராவ பகுதிகளில் நிருவப்படுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்காக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மற்றும் கடற்படை சமுக நலத் திட்டம் மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் ஸ்ரீ தர்மாச்ரம புத்த மையமத்தில் நிருவப்படுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரத்துக்காக ‘பயர் ஃப்ளை மிஷன் சிங்கப்பூர் நிறுவனம் மூலம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த நிருவனத்தின் நிதி மூலம் நிருவப்படுள்ள 07 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரமாகும்.

இது வரை 249 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 118,864 குடும்பங்களுக்கு மற்றும் 81,690 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல்வேறுசமூக சேவைகள் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளபடவுள்ளதாக குறிப்பிடத்தக்கது.