இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்களுடன் 12 படகுகள் கைது
 

வட கடற்படை கட்டளையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (ஆகஸ்ட் 07) இரவு மற்றும் இன்று காலை இலங்கைக்கு சொந்தமான வடக்கு கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 12 மீன்பிடி படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளது.

நெடுந்தீவுக்கு வடமேற்கு பகுதி கடலில் 02 இந்திய படகுகளும் கோவிலன்துறைக்கு வட கடல் பகுதியில் 10 படகுகளும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. குறித்த மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முரையான (பொடம் ட்ரோலின்) முரையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கினறனர். அது கடல் வளங்கள் அழிக்கும் மீன்பிடி முரையாகாகும்.

கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் மற்றும் பொருற்கள் காரைநகர் இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கும் கைது செய்யப்பட்டுள்ள மினவர்கள் காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்துக்கும் கொன்டுவந்த பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 03 ம் திகதி இந்தியா மற்றும் இலங்கை இடையில் இருதரப்பு நட்பின் ஒரு சின்னமாக இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 77 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.