புதிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 28) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார். கடற்படைத் தளபதி கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின் கெளரவ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு கெளரவ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் முதலில் தனது வாழ்த்துக்களை கடற்படைத் தளபதிக்கு தெரிவித்துள்ளார். இங்கு இவர்கள்க்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியவர்களால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளன.