புதிய நியமனம் பெற்ற இலங்கையின் நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் நைஜீரிய உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக புதிய நியமனம் பெற்ற கொமடோர் ஈ.ஒ பெரெய்ரா அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (2017 ஆகஸ்ட் 28) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

கொமடோர் ஈ.ஒ பெரெய்ரா அவர்கள் நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையேற்ற பின் கடற்படை தளபதியுடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அங்கு முதலில் கடற்படை தளபதி அவரது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துள்ளார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன