கடற்படை தளபதி விமானப்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை இன்று (ஆகஸ்ட் 29) விமானப்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

அங்கு புதிய கடற்படைத் தளபதி அவர்களுக்கு விமானப்படை தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் எதிர்கால நடவடிக்கைகளின் போது விமானப்படையின் விரிவாக்கப்பட்ட ஆதரவு கடற்படைக்கு வழங்கப்படும் என்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு தரப்பிற்கும் இடையேயான நட்பு மற்றும் நல்லுறவை குறித்து நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன