பிரிட்டானிய உயர் ஆணையர் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதிவுடன் சந்திப்பு
 

இலங்கையின் பிரிட்டானிய உயர் ஆணையர் அதிமேதகு ஜேம்ஸ் டவுரிஸ் அவர்கள் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி மெரில் விக்ரமசிங்க அவர்களை இன்று (ஆகஸ்ட் 30) வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

ஜேம்ஸ் டவுரிஸ் அவர்கள் மன்னார் பகுதியில் மேற்கொன்டுள்ள விஜயத்தின் போது வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியை சந்திதித்தார். அங்கு உயர் ஆணையாளருக்கு கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி ரியர் அட்மிரல் விக்ரமசிங்க அவர்கள் அன்பாக வரவேற்றியுள்ளார். இவர்களுக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னமும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. மேலும் இவர் தலைமன்னார் கடற்படை முகாமில் அமைந்துள்ள பழைய ரயில்பாதை மற்றும் கலங்கரை விளக்கம் பார்வையிட இது ஒரு வாய்ப்பாக கொன்டுள்ளார்.