கடற்படை தளபதியவர்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்களை இன்று (2017 செப்டம்பர் 01) பிராந்திய அபிவிருத்தி அமைச்சில் வைத்து சந்தித்தார். கடற்படைத் தளபதி அவர்கள் கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்களுடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் முதலில் தனது வாழ்த்துக்களை கடற்படைத் தளபதிக்கு தெரிவித்துள்ளார். இங்கு இவர்கள்க்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியவர்களால் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளன.