கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்ச்சிப் பெற்ற 152 கடற்படையினர்கள் வெளியேறினர்.
 

இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்சிப்பெற்ற 8 அதிகாரிகள் மற்றும் 144 கடற்படை வீரர்கள்  தமது பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து இன்று (செப்டம்பர் 09) திருகோணமலை சாம்பூரில் உள்ள மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் வெளியேறினர்கள்.

குறித்த மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு மற்றும் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்கள் கலந்து சிறப்பித்தார். மிக வண்ணமயமாக வெளியேறல் அணிவகுப்பு நடைபெற்றதாக குறிப்பிடத்தக்து. மேலும் புதிதாக நிறுவப்பட்டுள்ள இப்படைப்பிரிவு, கடல் மற்றும் தரை வழி படை நடவடிக்கைகளில் வெற்றிகரமாக ஈடுபடும் முதற்தர படையாக செயல்படவுள்ளதுடன் கடல் மார்க்கமாக வரும் எந்தவொரு ஆபத்தான தருணத்தையும் வெற்றிகரமாக முறியடிக்கும் தன்மையையும் கொண்டது.

இந்நிகழ்வில், கடற்படையின் கொடிவரிசை கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் கபில சமரவீர, பணிப்பாளர் கடற்படை தரை நடவடிக்கைகள் கொமடோர் உதேனி சேரசிங்க, இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தின் தளபதி கேப்டன்  சுமித்ர பொன்சேகா ஆகியவர்கள்  உள்ளிட்ட கிழக்கு கடற்படை கட்டளையின் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.