இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு மற்றும்  இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்ரம கப்பலுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (செப்டம்பர் 11)  இலங்கைக்கு சொந்தமான வடக்கு கடலில் கச்சதீவிருந்து 02 கடல் மைல்கள் வடகிழக்கு  பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12  இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின்  02 மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் மற்றும் பொருற்கள் காரைநகர் இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கும் கைது செய்யப்பட்டுள்ள மினவர்கள் காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்துக்கும் கொன்டுவந்த பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.