இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

இலங்கை கடற்படை வீரர்களால் இன்று (செப்டம்பர் 19) காலை இலங்கைக்கு சொந்தமான கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்ரம, ரனஜய மற்றும் எடிதர II ஆகிய அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் வடக்கு கடல் எல்லையில் நெடுந்தீவு கலங்கரை விளக்கெத்துக்கு வடமேற்கு திசையில் சுமார் 13.6 மற்றும் 10.7 கடல் மைல்கள் தூரத்தில் வைத்து குறித்த மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் மற்றும் பொருற்கள் காரைநகர் இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கு கொன்டுவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.